Saturday, 11 August 2018



இராமேஸ்வரம்:



            ராமன் சீதையை  மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே இராமன்  ஈஸ்வரன்    வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் இராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்
இருப்பிடம் :

நாடு                               :இந்தியா 

மாநிலம்                       :தமிழ்நாடு 
மாவட்டம்                    :இராமநாதபுரம் 
ஆளுநர்                         :பன்வாரிலால் 
முதலமைச்சர்             :எடப்பாடி க .பழனிசாமி 
மாவட்ட ஆட்சியர்      :எஸ் .நடராஜன் 
நகராட்சி தலைவர்     :அர்ஜுனன் 
மக்கள் தொகை           :37(2001)
இராமநாதசுவாமி  கோவிலின்  வரலாறு :

                இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்  பாடல் பெற்ற தளங்களில் ஒன்றாகும்.  சம்பத்தர்,அப்பர்  ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம்  இராமேஸ்வரம் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க  தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில்  கொன்ற பாவம் தீர   இராவணனை கொன்ற     இராமன்  வழிபட்டான் என்பது நம்பிக்கை உள்ளது . இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமிஅம்மன் பெயர் பர்வத வர்த்தினி.



கோயில் அமைப்பு ஆனது  தென்னிந்திய கோயில்களைப் போலவே இக்கோயிலும் நான்கு பெரிய மதில்களால் சூழப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்காக 865 அடி நீளமும்வடக்கிலிருந்து தெற்காக 657 அடி நீளமும் கொண்டுகிழக்கு மற்றும் மேற்காக இரண்டு பெரிய கோபுரங்களைக் கொண்டது. உலகிலேயே நீளமான பிரகாரங்கள் கொண்டுள்ள இக்கோயிலின்கிழக்கு மற்றும் மேற்கு வெளிப் பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 400 அடிகள்வடக்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரங்களின் நீளம் தனித்தனியே 640 அடிகள் ஆகும். கிழக்குதெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 224 அடிகள் மற்றும் வடக்குதெற்கு உட்பிரகாரங்களின் நீளம் முறையே 352 அடிகளாலும். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி ஆகும். வெளிப்பிரகாரங்களில் மட்டும் 1200 தூண்கள் உள்ளன.

பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் இராமேஸ்வரம் மன்னர்  முத்துராமலிங்க சேதுபதி  இக்கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத்தை 1740–1770 முடிய உள்ள காலத்தில கட்டி முடித்தார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22½ அடி உயரம் கொண்டது.கோவிலின் முக்கிய திருவிழாக்கள் ஆக மகாசிவராத்திரி,மார்கழி திருவாதிரை,பங்குனி உத்திரம் ,திருக்கார்த்திகை,ஆடி அமாவாசை,தை அமாவாசை  ,மகாளய அமாவாசை ஆகியவை உள்ளது .
காசிராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில்  நீராடிமணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்றுகங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டுகாசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியில் இருந்து  கங்கை தீர்த்தம் எடுத்து வந்துராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.


இராமேஸ்வரம் கோயிலின் முதல் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) 1948இல் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது குடமுழுக்கு 1975இலும்மூன்றாவது குடமுழுக்கு 2001இலும் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின் அடுத்த குடமுழுக்கான நான்காவது குடமுழுக்கு மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களுக்கான கும்பாபிஷேகம் 20.01.2016 அன்று நடைபெற்றது.

  விவேகானத்தார் 27 ஜனவரி 1897இல் சுவாமி நாகநாதரை வணங்கி ஆற்றிய சொற்பொழிவில்அன்புதான் சமயம். உடல்உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. எனவே உடல் மற்றும் மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன்  செவிசாய்க்கிறார் என்றார் .https://youtu.be/TxRKBeXN1xk


இராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும்  அவற்றின் மகிமைகளும் 

 1.மகாலெட்சுமி  தீர்த்தம் :

                                  

                  இது கிழக்கு கோவிலின் பிரதான வாசலில் அனுமார் சன்னதிக்கு எதிரில் தெற்கு பக்கத்தில் உள்ளது .இதில் ஸ்னானம் செய்தல்  சகல ஐஸ்வர்யமும் பெறலாம் .

2.சாவித்திரி தீர்த்தம் ,3.காயத்ரி தீர்த்தம் ,4.சரஸ்வதி தீர்த்தம் :

                             

                     இம்மூன்று தீர்த்தங்களும் அனுமார் கோவிலுக்கு மேல்புறம் உள்ளது .இம்மூன்று தீர்த்தங்களில் ஸ்னானம் செய்வதால் மத சடங்குகளை விட்டவர் சந்ததியில்லாதவர் இஷ்ட சித்தி அடையாலாம் .

5.சேது மாதவ தீர்த்தம் : 

            இது மூன்றாம் பிரகாரத்தின் மேற்கு பகுதியில்  உள்ள தெப்பக்குளம் .இதில் ஸ்ரீராபிரானால் சகல லெட்சுமி விலாசமும் ,சித்த சக்தியும் பெறலாம் .

6.நள தீர்த்தம் :

                                
                மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு தென்புறம் உள்ளது .இதில் நீராடுவதால் சூரிய தேஜசை அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர் .
7.நீல தீர்த்தம் :
                   
         மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் உள்ள சேது மாதவர் சன்னதிக்கு வடபுறம் உள்ளது இதில் நீராடுவதால் சமஸ்தயாக பலனையும் அடைந்து சொர்க்கலோக பதவி அடைவர் .
8.கவாய தீர்த்தம் :
                              
             இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் உள்ளது .இதில் நீராடுவதால் சக்குசாயம்,கோபம் ,மனைவலினம் ,தேக ஆரோக்கியம்  கிடைக்கும் .  

9.கவாட்ச தீர்த்தம் :  


            இது மூன்றாம் பிரகாரம் சேது மாதவர் சன்னதியின் முன்புறம் கவாய தீர்த்தத்திற்கு அருகில் உள்ளது .இதில் நீராடுதுவதால் நரகத்திற்கு செல்ல மாட்டார்கள் .மன வலிமை ,தேக ஆரோக்கியம் ,திட சரீரம் கிடைக்கும் .

10.கந்நமாதன தீர்த்தம் :

சேது மாதவர் சன்னதியின் முன் பகுதியில் கவாய்,கவாச் தீர்த்தங்களுக்கு  அருகில் உள்ளது .இதில் நீராடுவதால்    மஹாதரி ததி ம் நீங்கி ஐஸ்வர்யா  சித்தியும் பெற்று    ஹத்தியாதிபாப தம்நிவர்த்தி பெறுவார் .

11.சங்கு தீர்த்தம்:

                        

ராமநாதசுவாமி  கோவிலில் பிரதான  வாசல் உட்புறம் தெற்கு பக்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ளது .இதில் நீராடுவதால் செயிநன்றி மறந்த சாபம் நீங்கப் பெரும் .
12.சக்கர தீர்த்தம் :
              இராமநாதசுவாமிகோவில் பிரதான வாசல் உட்புறம் உள்ள இரண்டாம் பிரகாரத்தில் வடபுறம் உள்ள  கருவூலத்தின் கீழ்புறம் உள்ளது .இதில் நீராடுவதால்  ஊனம்,குருடு ,செவிடு  ஆகியவை  நீங்கி  சௌக்கியம் அடைவர் .

13.பிரம்மாத்திர விமோசன  தீர்த்தம் :

                          இது  இரண்டாம் பிரகாரம் வடக்கு பக்கத்தில் பைரவர் சன்னதி  அருகில் உள்ளது.இதில் நீராடுவதால் ப்ரம்மஹத்தியாதி தோஷங்களும் ,பாவங்களும்  நிவர்த்தியாவதுடன் ,பில்லி  சூனியமும் நீங்கும்.

14.சூர்ய தீர்த்தம் :

                இது  இரண்டாம்  பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் மேற்கு   பக்கம் அமைந்துள்ளது .இத்தீர்த்தத்தில் நீராடுவதால் திரிகாலஞானமும் உண்டாவதுடன் துரோகங்கள் நிவர்த்தியாகும்.

15.சந்திர தீர்த்தம் :

                         இது இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தின் மேற்கு பக்கம் உள்ளது .இதில் நீராடுவதால் துரோகம் நிவர்த்தி அகலும் .

16.கங்கா தீர்த்தம் 17.யமுனா தீர்த்தம் 18.காயத்ரி தீர்த்தம் :

                          இம்மூன்று தீர்த்தங்களும் திருக்கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கருவூலத்தில்    மேற்கு பக்கம் உள்ள சூரியன் ,சந்திரன்  தீர்த்தத்திற்கு எதிரில் அமைந்துள்ளது .இவைகளில் நீராடுவதனால் பிணி ,மூப்பு ,சாக்காடு ஆகியவைகளும் அஞ்ஞானமும் நீங்கி முக்தி அடையலாம் .

19.சாத்யாம்ருத தீர்த்தம் :

                                     திருக்கோவில் அம்மபாள் சன்னதியின் மூலஸ்தான  நுழைவாயிலின் அருகே உள்ள அஷ்டலட்சுமி சன்னதியின் தெற்கு பக்கம் உள்ளது .இதில் நீராடினால் தேவாதகோபம் பிராம்மணசாபம் நிவர்த்தியாவதுடன் ,சூரியமூர்த்தி ,மோட்ச பிராப்தி ஆகியவை கிடைக்கும் .

20.சிவ தீர்த்தம் :

                          இந்த தீர்த்தம் சுவாமி சன்னதி நுழைவாயில் மற்றும் அம்மன் சன்னதி நுழைவாயில் ஆகியவற்றுக்கு இடையே நந்தி தேவருக்கு தென்புறம் அமைந்துள்ளது .இதில் ஸ்னானம் நீராடினால்  சகல சௌபாக்கியமும் கிடைக்கும் .

21.சர்வ தீர்த்தம் :

                        இந்த தீர்த்தம் முதல் பிரகாரத்தில்   ராமநாதசுவாமி  சன்னதி முன் உள்ளது .இதில் நீராடினால் பிறவிக்குருடு நோய் நரை திரையும் நீங்கி வளமடையலாம் .
கோவிலுக்கு வெளியே பல தீர்த்தங்கள் புயலாலும் ஆக்கிரமிப்பாலும் பாதிக்கப்பட்டதால் இவற்றில் நீராட இயலாது .

22.கோடி தீர்த்தம் :

                         

                        இந்த தீர்த்தமானது இராமர் லிங்கப் பிரதிஷ்டை செய்தபோது அபிஷேகத்திற்கு நீர் தேவைப்பட்டது .அதனால் ராமனானவர் தன் அம்பின் நுனியை பூமியில் வைத்து அழுத்தினதால் அந்த இடத்தில் பூமியைப் பிளந்து கொண்டு நீர் வந்தது .அதுவே கோடி தீர்த்தம் எனப்படுகிறது .

No comments:

Post a Comment