எனது கிராமம்

                          நிலம்அழகியமங்களம்  


 இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் நிலம்அழகியமங்களம்  
 எங்கள்  அழகிய இந்த  கிராமம் நிலம்அழகியமங்களம் என பெயர்  பெற  காரணம்  அவ்வளவு  பசுமை எங்கு  பார்த்தாலும்  நிலங்கள்  அது நிறைந்த பசுமை.எனவே  எங்கள்  ஊருக்கு  இப்படி ஒரு  அழகிய பெயர்  வைக்கப்பட்டது .எங்கு  பார்த்தாலும்  வாழை  தோப்பு, தென்னை  தோப்பு, நெல்,என விவசாயம்  மட்டுமே  எங்களின்  வாழ்கை  என்று  வாழும்  என்  ஊரில்  வாழும்  மக்களை  பற்றியும் அவர்களின் பாரம்பரியம்   பற்றிய  சில  கருத்துகள் .எங்கள் ஊர் சிறிய கிராமமாக இருந்தாலும் 8ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் ,நூலகம் ,நிறைய கடைகள் ,20க்கும் மேற்பட்ட  கோவில்களுக்கும்  உள்ளது.
                                                                      

                                                தென்னை தோப்பு :



வாழை தோப்பு :






அடுத்ததாக  எனது  ஊரின்  பெருமையாக அனைவராலும்  வணங்கப்படும் எங்களின்  காவல்  தெய்வமாய்  விளங்கும்  கிராம  தேவதைகள் மூன்று .எங்கள்  ஊரில்  நிறைய  கோவில்கள்  இருந்தாலும்  இந்த  மூன்று  தேவதைகள்  ஸ்ரீ  அய்யனார், ஸ்ரீ  பிடாரி அம்மன், ஸ்ரீ  காளி அம்மன். இவர்கள் மூவரும்  எழுந்தருள்பாளிக்கின்றனர் .

கிராமதேவதைகளின் வரலாறு :

                         ஸ்ரீ பிடாரிஅம்மன்,ஸ்ரீ ஐய்யனார் ,ஸ்ரீ காளியம்மன் ஆகிய மூவரும் உடன்பிறந்தவர்கள்.இதில் மூத்தவளான பிடாரிக்கு குழந்தைபாக்கியம் இல்லை .தன் தங்கை காளியம்மனுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறந்தது .அதனை பார்க்க மகிழ்ச்சியுடனும் ,ஆசையுடனும்  சென்றாள்.அப்போது  அவள் வருவதை கண்ட காளி தன் பிள்ளைகளை பார்த்து கண் வைத்துவிடுவாள் என்று எண்ணி தன் ஒன்பது பிள்ளைகளையும் கூடைக்குள் மறைத்துவைத்தாள்.இதனை கண்ட பிடாரி கோபத்துடன் "ஒன்பது பிள்ளைகளும் கல்லாக மாற"என்று  சாபம் கொடுத்ததாகவும் ,கல்லாக மாறியதாகவும் வரலாறு கூறுகிறது .

திருவிழா :

வருடம்  வருடம்  ஆடி மாதம்   எங்கள்  ஊரில்  மிகவும்  சிறப்பாக  திருவிழா  நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாக்கு முதல் நாள்   மாலை ஐய்யன்னார்கோவிலில் இருந்து மாலை  4 மணிக்கு அக்னி சட்டி ஊருவலம் புறப்பட்டு  ஒவ்வாரு வீடாக சென்று  ஊரையே  சுற்றி , இறுதியில் காளியம்மன் கோவிலுக்கு 9 மணிக்கு  வந்தடையும் .இதன் காரணமாக அம்மன் ஊரில் உள்ள அனைத்து வீட்டிற்கும் சென்று அனைத்து வீட்டில் உள்ள மக்களின் கஷ்டங்களை தெரிந்து கொள்வதற்காக வீடு வீடாக  அக்கினி சட்டியை கையில் ஏந்தி கொண்டு செல்வதாக கூறப்படுகின்றனர்.
                                                      
   
இரண்டாம் நாள்  காலை 10 மணிக்கு  அய்யனார் கோவிலில் இருந்து காளியம்மன் கோவிலுக்கு பால் காவடி ,பரவ காவடி,பண்ணீர்  காவடி ,பால் குடம்,சந்தன குடம் ,வேல் குத்துதல்  என தன் நேர்த்திக்கடன்களை மக்கள் அனைவரும் அம்மனுக்கு செலுத்துவார்கள் .
         பால் குடம் எடுத்து முடிந்தவுடன்   12 மணிக்கு ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலில் அன்னதானம் நடைபெறும் .
                                                    


அன்று மாலை 5 மணியளவில்  ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் இருந்து பெண்கள் அனைவரும் பூ தட்டு எடுத்துக்கொண்டு காளியம்மனுக்கு செலுத்துவார்கள் .
   அன்று இரவு 7 மணிக்கு அக்கினி காவடி ,அக்கினி சட்டி ,ஆயிரம் கண் பானை ஆகியவை இளைஞர்கள்  ஆட்டத்துடன் வந்து சேரும் .
                                                      


               கோவிலுக்கு  சென்றவுடன் வானவேடிக்கை நடத்தப்படும் .இரவு  10 மணிக்கு பூ வளர்த்தல் நிகழ்ப்பெரும்.11 மணியளவில் கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெறும் .
மறுநாள் காலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும்  பூ மிதித்து தன் நேர்த்திக்கடனையும் ,திருவிழாவையும் முடித்து வைப்பர் .
                                     

ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு நகரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் விவசாயத்தையே நம்பி வாழும் எங்கள் ஊரில் வாழ்வதை நினைத்து மிகவும் பெருமை அடைகிறோம் .

3 comments: