தனுஷ்கோடி

                                     னுஷ்கோடி

                           
              
   தனுஷ்கோடி(Dhanushkodi)தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம்  இராமேஸ்வரம் தீவின் தென்கோடியில் உள்ள ஊர் .இது பாம்பனுக்கு தென்கிழக்கே இராமேஸ்வரத்தில் இருந்து 25கி.மீ.,  தொலைவில் உள்ளது .இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுககமாக விளங்கியது.
இங்கு வங்க கடலும்,இந்திய பெரும்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது.இங்கு குளித்தல் தான் காசி யாத்திரை முடியுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.இங்குள்ள கோதண்டராமர் கோயில் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ.,தொலைவில் உள்ளது.

·         வில்லைப் போன்று வளைந்த கடற்கரையை கொண்டிருப்பதால் இதனை தனுஷ்கோடி என்றனர். இது சங்ககாலத்துக்கு பிந்திய வழக்கு (வில்=தனுஷ்)
·         கோடி என்பது முனை . வானை தொடும் முனைகோடு’.அதுபோல கடலில் அமைந்துள்ள நிலமுனை இந்தகோடி
·         கோடிஎன்பது இதன் சங்ககால பெயர் .’தொன்முதுகொடிஎன்று அது சிறப்பிக்கப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில்
கவுரியர் ஆட்ச

இது வென்வேர் கவுரியர்என்று போற்றப்பட்டுள்ள அக்கால பாண்டியருக்கு  உரியது.

விழாவில் மகளிர் தழையாடை

அவ்வூரில் வாழ்ந்த அக்கால மகளிர் விழாக் காலங்களில் தங்களுக்கு ஆடைக்கு மேல் பூந்தழை ஆடை அணிந்து கொள்வார்களாம் .அதில் நீண்ட காம்போடு  கோத்த நெய்தல் பூக்கள்  தொங்குமாம்.

காணலம் பெருந்துறை

அங்குகாணலம் பெருந்துறைஎன்று வழங்கப்பட்ட இடத்தில் மரமும்,புன்னை மரமும் பூத்து குலுங்குமாம்.அப்பகுதிகாதலர் மகிழும் இடமாகவும் திகழ்ந்திருகிறது .

இராமன் ஆலமரத்தடியில் தவம்

அங்கிருந்த ஓர்  ஆலமரத்து விளுதுகளிடயே அமர்ந்து கொண்டு வெல்போர் இராமன் அருமறை மந்திரங்களை ஒரு காலத்தில் சொல்லி கொண்டு இருந்தாராம்.அப்போது அங்கே அமைதி நிலவிற்றாம் .பறவைகள் கூட ஒலிகவில்லயாம்.

1964புயல்

                                        
1964ஆம்ஆண்டுடிசம்பர் 23இல்மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போதுராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது .தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கப்பட்டது.தனுஷ்கோடியையும் பாம்பனையும்  இணைந்த இருப்புபாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது.இதன்போதுசென்னையில் இருந்து இராமேஸ்வரம்சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்து செல்லபட்டத்தில்
அதில் பயணித்த 123பேரும் கொல்லப்பட்டனர் .அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிர் இழந்தனர் .அதன் பின்னர் தமிழ்நாடு  அரசு இந்த ஊரை வாழைத் தகுதியற்றதாக அறிவித்தது.தற்போது புதிய தனுஷ்கோடி உருவாக்கப்படுகிறது.
புயல் வந்து புரட்டி போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சம் இருப்பது ஒரு தேவாலயமும் ,சில்லா கட்டடங்களும் மட்டுமே .இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில்லா மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர்.அவர்கள்,தனுஷ்கோடிக்கு வரும்   சுற்றுல்லாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றன .மீன் சுட்டுத் தருவது ,சிப்பி,முத்துகளால் ஆனா மணி மாலைகளால் உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டது .ரயில் தண்டவாளம் ,பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிகிறது.

போக்குவரத்து

9.5 கி.மீ., நீளமுள்ள சாலையில் தேசிய நெடுஞ்சாலைமுகுந்தாரையர் சாதிரமிலிருந்து தனுஷ்கோடிவரையான 5கி.மீ.,மற்றும் தனுஷ்கோடிக்கு அரிச்சமுனைக்கு 4.5கி.மீ.,சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனம் மூலம் செல்லலாம் அது அசோகாவின் தூண்களில் முடிவடையும் .இந்தியாவின் பிரதான மண்டபத்தை தனுஷ்கோடிக்கு இணைக்கும் ஒரு மீட்டர் கேஜ் ரயில்பாதை இருந்தது .1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன் முதல் தனுஷ்கோடி வரை மீட்டர்கேஜ் கிளை கோடு அளிக்கப்பட்டபோது ,சென்னை எழும்பூரில் இருந்து தனுஷ்கோடி வரை Boat Mail எக்ஸ்பிரஸ் ஓடியது .2003ஆம் ஆண்டில் ,ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 16 கிலோமீட்டர் (9.9 மைல்)ரயில் பாதையை மீண்டும் அமைப்பதற்கு ரயில்வே அமைச்சகத்திற்கு தெற்கு ரயில்வே திட்டம் ஒன்றை அனுப்பியது.2010இல் தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய ரயில் பாதை சாத்தியமாவதற்கு திட்டமிடல் கமிஷன் முயன்றது .2016 வரை,தனுஷ்கோடி கடற்கரை  செல்வதற்கு கடற்கரை ஓரம் நடந்தோ அல்லது ஜூப்பினையிலோ செல்வார்கள்.2016 ஆம் ஆண்டில்,முகுந்தராயர் சாதிராம் கிராமத்திலிருந்து தனுஷ்கோடி கடற்கரை ஒரு சாலை அமைக்கப்பட்டது .

இந்தியாவில் முதல் கடல் இணைப்பு

ராமேஸ்வரம் தீவையும் இந்தியாவையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவில் ஒரு பொறியியியல் அதிசயமாக இருக்கிறது .மும்பையில் முடிக்கப்பட்ட பாந்த்ராவோர்லி கடல் இணைப்புக்குப் பிறகு இது இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட கடல்-பாலம் ஆகும்.இந்த பாலத்தின் குறுக்கே உள்ள ரயில் பயணம் அதிர்சியூட்டும் காட்சிகளை அளிக்கிறது.மற்றொரு சுவாரசியமான உண்மை என்னவென்றால்,இழிவான சூறாவளியில்   சேதமடைந்த பாலம் 48 நாட்களுக்குள்மறுகட்டமைக்கபட்டது ஒரு சாதனை என்று கருதபடுகிறது .

தனுஷ்கோடி கடற்கரை
                                                

தனுஷ்கோடி கடற்கரை (முகுந்தராயர் சாத்திரம் மூண்டிரம் சத்திரம்)கடற்கரை 15 கி.மீ.,வரை நீடிக்கப்பட்டுள்ளது .முகுந்தராயர் சத்திரம்என்றுஅழைக்கப்படும் உயர் அலை கடல்கரை விளையாடிவதற்கு பாதுகாப்பான பகுதி.கடல்அலைகள் மிக அதிகமாக இருப்பதால்(அதிகபட்ச உயரம் 12 அடி என பதிவு செய்யப்பட்டுள்ளது)இது நீச்சல் தெரியாதவர்களுக்கு ஏற்றது அல்ல.இந்த கடற்கரையில் கடற்கரை பைக் சவாரி பரபரப்பான அனுபவமாக உள்ளது .

அரிச்சல்முனாய்(Arichal Munai)         
                                                                 
                                  
அரிச்சல் முனாய் இரண்டு கடல்களில் (வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங்கடல் )ஒன்றிணைவு மற்றும் ராமேஸ்வரம் முடிவடைவிடமே ஆகும் ,தனுஷ்கோடியில் உள்ள இந்த இடம் இந்தியா மற்றும் இலங்கையின் நில எல்லை ஆகும் ,இங்கிருந்து இலங்கை சுமார் 15 கி.மீ.,
ஒருகடல்களின் இணைப்பு புள்ளி (arichal munai)நீச்சல் அல்லது குளிப்பதற்கு ஆபத்து என்று கருதப்படுகிறது.
.
தனுஷ்கோடியின் சிறப்பு அம்சங்கள்

·         உயர் அலைகள் கொண்ட கண்கவர் நீல கடல் காட்சி
·         கடற்கரையில் பைக் சவாரி
·         கடல் கரையில் விளையாடி குளிக்கலாம்
·         கடற்கரையில் அமைதியான மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் நடை
·         மீதமுள்ளவர்களின் பார்வை
·         கடலைஇணைத்தல்(ராமேஸ்வரத்தின் தெற்காசிய முடிவு)
·  குளிர்காலத்தில்(அக்டோபர்,நவம்பர்)பருவங்கள் கடற்புலிகள் ,பறவைகள் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் பறவைகள் தனுஷ்கோடி (கோதண்டராமரின் கோவிலுக்கு அருகிலுள்ள அரண்மனையில்)வருகின்றன
.
கோதண்டராமர் கோயில்  
                                                 



கோதண்டராமர் கோயில் (kothandaramaswamy temple), ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12கி.மீ., தூரத்தில்,வங்காள விரிகுடா ,மன்னார் வளைகுடா  ஆகிய இரு கடல்களுக்கு  நடுவில் உள்ள தனுஷ்கோடி தீவில் அமைந்துள்ளது

மரபு வரலாறு

                                                        

 இராமாயணத்தில்,வீபீஷணன்தன் சகோதரன் ராவணனிடம் ,சீதையை கவர்ந்து வந்தது தவறு என்றும் ,அவளைராமரிடமே ஒப்டைகும்படியும் அறிவுரைகூறினான்.ராவணன் அதை ஏற்க மறுத்ததுடன் ,வீபீஷணனை காலால் மிதக்க சென்றான் .இதனால் வெறுப்புற்ற வீபீஷணன் ராமருக்குஉதவி செய்வதற்காக ராமரிடம் சரணாகதி அடைந்தான்.வீபீஷணனை தன்தம்பியாக ஏற்றுகொண்ட ராமன்,இலங்கையை வெற்றி பெரும் முன்பாகவே ,இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார் . வீபீஷணனை பட்டாபிஷேகம் நடந்த இடத்தில ,ராமருக்கு அமைக்கப்பட்ட கோயில் கோதண்டராமர் கோயில் ஆகும்.இக்கோயிலில் ராமபிரமான் அருகில் வீபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.

இராமாயணத் திருவிழா

கோதண்டராமர் கோயிலில் ராமர்,இலக்குவன்ம,சீதை ஆகியோர் உற்சவமூர்த்திகளாக காட்சி தருகின்றனர்.ஆணி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா,வைகுண்ட ஏகாதேசி ,ராம நவமி மற்றும் ஆடி அம்மாவாசை ஆகிய நாட்களில் உற்சவம் நடைபெறும் .
இராமாயணத்தைதிருவிழாவின் போது ,ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல்,அவனை ஜடாயு தடுத்தல் ,ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல்,ராமன் ராவணனை வீழ்த்துதல் ,வீழ்த்துதல்,வீபீஷனருக்குபட்டாபிஷேகம் செய்தல் ,ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய நிகழ்சிகள் நடத்தி கான்பிக்கபடும்.

No comments:

Post a Comment