பாம்பன்

 பாலம் :

                                            
                                             
                                        பாக்கு  நீரிணையில்  இந்தியாவின்  தமிழ்நாடு  மாநிலத்தில் அமைந்துள்ள  பெருநிலப்பரப்பையும்  இராமேஸ்வரத்தையும்  இணைக்கும் ஒரு கொடுங்கை  பாலமாகும் .இது  இந்தியாவின்  முதல் கடல்  பாலம்  ஆகும் .இது  2.3கி .மீ , நீளம்  கொண்ட  இந்தியாவின் இரண்டாவது  மிக  நீளமான பாலம் ஆகும் .(முதலில்  பாந்திரா -வொர்லி கடற்பாலம் ) ஆகும்  இப்பெயரில் பேருந்து ,தொடருந்துப் பாலம்  என  இரண்டாக  அழைக்கப்பட்டாலும் ,பொதுவாக தொடருந்து பாலத்தையே  குறிப்பிடுவர் .

அதிகாரபூர்வ பெயர் : அன்னை இந்திரா காந்தி பாலம்
போக்குவரத்து :2 வலி சாலை போக்குவரத்து
தாண்டுவது :பாக்கு நீரிணை

தொடருந்து பாலம் :

                                    



                             இப்பாலமே இந்தியாவின்  மிக நீளமான தொடருந்து பாலமாகும் .இதன் நீளம் 2.3 கி .மீ .பாம்பன்  ரயில் பாலம் 6776 அடி (2065மீ )
நீளமானது .இதை  1914 ஆம் ஆண்டு திறந்தனர் .இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செய்வதற்கு ஏதுவாக  பாலத்தின்  நடுப்பகுதியை உயர தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ள .தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினார் .பின்னர் இதை அகலப்பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே ஆகஸ்ட் 12,2007 ஆம் ஆண்டு  புதுப்பித்து .ஒவ்வொரு மாதமும்  கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாக செல்கின்றன .

பேருந்து பாலம் :

                                                      
                                 
                                       இராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதல் முதலாக அக்டோபர் 2,1988 அம் ஆண்டு தொடங்கப்பட்டது .இப்பாலத்திற்கு  இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .இம்மேம்பாலத்தில் இருந்து அருகில் உள்ள தீவுகளையும் ,பலத்திற்கு கீழே செல்லும்  தொடருந்து பாலத்தையும் காணமுடியும் .
       

கட்டுமானம் :

                        
                                   பாம்பன்  தொடருந்து பாலம் 6766 அடி(2065 மீ )நீளமானது .இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் தொடங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பிப்ரவரி 24 ஆம் தேதி 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயர தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளன(ராட்டின பாலம்).இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும் .

கட்டுமான பொருட்கள் : 

                                        பாலம் கட்ட தேவையான  18000 டன் ஜல்லி கற்கள் 270 கி .மீ தொலைவில் இருந்தும் ,மணல் 110  கி .மீ  தொலைவில் இருந்தும் எடுத்துவரப்பட்டது .
                           இதனை கட்ட சிமெண்ட் 5000 டன் ,எஃகு இரும்பு 18000 டன்  உபயோகப்படுத்தப்பட்டது . 

வலிமை :                     

                         பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருபிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்கவின் மயாமிக்கு அடுத்தபடியாக )அமைக்கப்பட்டுள்ளது .இதனால் இதற்கான கட்டுமானப்பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றனர் .அத்துடன் இப்பகுதி  கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதி ஆகும் .1964 ல் நிகழ்ந்த  தனுஷ்கோடி புயலில்  இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்ப்படவில்லை .

No comments:

Post a Comment